ஈரோடு, மே 9 –
பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2ந் தேதி துவங்கி 26 ந் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் 221 பள்ளிகளில் பயின்று தேர்வெழுதிய 22,478 மாணவ மாணவியர்களில் 22,225 மாணவ மாணவியர்கள் தேர்ச்சி பெற்று ஒட்டுமொத்தமாக 98.87 சதவிகிதம் தேர்ச்சியில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது. 128 பள்ளிகளில் தேர்வெழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் 46 அரசுப் பள்ளிகள், 1 அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி, நிதியுதவிப் பள்ளிகள் 5, தனியார் பள்ளிகள் 76. ஈரோடு மாவட்டத்தில் அரசு பொதுத்தேர்வெழுதிய மாணவ மாணவியர்களில் 1235 பேர் பாடவாரியாக 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.


