ஆரல்வாய்மொழி, ஜூன் 9 –
ஆரல்வாய்மொழி, கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த ஆரல்வாய்மொழி பேரூராட்சி 8-வது வார்டு அதிமுக கிளைச் செயலாளர் மனேகாரன் என்பவர் வீடு அண்மையில் பெய்த பலத்த மழையினால் இடிந்த விழுந்தது. இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சரும், குமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளருமான எம்.எல்.ஏ., தளவாய்சுந்தரத்திடம் வீட்டினை செப்பனிட்டுத் தரக் கோரிக்கை வைத்தார். கோரிக்கையினை ஏற்ற எம்.எல்.ஏ., தளவாய்சுந்தரம் தனது சொந்த நிதியிலிருந்து ரூ.5.50 இலட்சம் நிதி உதவி அளித்து, புதிதாகக் கட்டப்பட்ட காமராஜர் இல்லம் என்ற வீட்டினை நேற்று திறந்து வைத்துக் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். அருகில் ஆரல்வாய்மொழி சிறப்புநிலை பேரூராட்சி மன்றத் தலைவரும், தோவாளை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளருமான முத்துக்குமார், ஆரல்வாய்மொழி சிறப்புநிலை பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சுதாபாலகிருஷ்ணன், கிழக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளரும், மாநகராட்சி கவுன்சிலருமான அக்சயா கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.