கிருஷ்ணகிரி, ஜூன் 21 –
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மாங்கனி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நடப்பாண்டு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் பணிகளை தனியார் நிறுவனங்கள் மேற்கொள்ளாத காரணத்தால் மாங்கனிகள் அழுகி வருவதாகவும் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிட வேண்டும் என அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. இதில் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான தம்பி துரை, அதிமுக துணை பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான K.P.முனுசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் அசோக்குமார், தமிழ்செல்வன், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி உள்ளிட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.