அஞ்சுகிராமம், ஆக. 18 –
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் மருங்கூர் வேப்பமூடு சந்திப்பில் பொதுகூட்டம் நடந்தது. திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா, திமுக அரசின் நான்காண்டு சாதனைகளை கிராமங்கள் மற்றும் வீடுகள் தோறும் நடத்த வேண்டும் என திமுக இளைஞரணி மாநில தலைவர் உதயநிதியின் அறிவுறுத்தலின்படி குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ் வழிகாட்டுதலோடு அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் வக்கீல் மதியழகன் ஆலோசனைபடி அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பேரூராட்சி, ஊராட்சி, வார்டுகளில் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று மருங்கூரில் நடந்த கூட்டத்திற்கு மருங்கூர் பேரூர் இளைஞரணி துணை அமைப்பாளர் விக்னேஷ் முன்னிலை வகித்தார். அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர்கள் காந்திராஜ், கவிதன், அஞ்சை ரெஜீஸ், பேருர் செயலாளர்கள் மருங்கூர் மகேஷ், அஞ்சை இளங்கோ, தேரூர் முத்து, மயிலை டாக்டர் சுதாகர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வக்கீல் அகஸ்தீசன், துணை அமைப்பாளர் வக்கீல் சரவணன், பொன் ஜாண்சன் கலந்து கொண்டனர். திமுக அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் மதியழகன், மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ், என் உயிரினும் மேலான இளம் பேச்சாளர் ஏஞ்சலின், ஒற்றையால் விளை அன்பழகன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
மேலும் மருங்கூர் இளைஞரணி ரமேஷ், நவீன் கிஷோர், சாம் ஜோஸ் ராஜ் ஏகராஜன், இன்ப சுதன், புஷ்பராஜன், சுரேஷ், அந்தோணி டிட்டோ, ஜான், மைக்கேல், அந்தோணி, அனுவேல், வேல்குமார் சிவபாரதி, அசித், அருண்குமார், ஒன்றிய மகளிரணி துணை அமைப்பாளர் ரமா ரமேஷ், ஷீலா கிளாட்சன் மற்றும் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள், ஒன்றிய, பேருர் துணை அமைப்பாளர்கள், பேரூர் நிர்வாகிகள் மற்றும்
கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணிகள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



