சிவகங்கை, ஜீலை 11 –
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை வட்டம், சிவகங்கை நகர், ஸ்ரீ பிள்ளைவயல் காளியம்மன் திருக்கோவிலில் 11.07.2025 (வெள்ளிக்கிழமை) அன்று பூச்சொரிதல் விழா நடைபெறுவதை முன்னிட்டு அன்றையதினம் பொங்கல் மற்றும் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுவதால் சட்டம் ஒழுங்கினை பராமரிக்கும் பொருட்டு 11.07.2025 அன்று ஒரு நாள் மட்டும் சிவகங்கை நகர் சரகத்திற்குட்பட்ட டாஸ்மாக் மதுபானக்கடைகளான 7514 (பேருந்து நிலையம் அருகில், சிவகங்கை), 7552 (திருவள்ளுவர் தெரு, சிவகங்கை), 7556 (பழைய JP தியேட்டர் அருகில், சிவகங்கை), 7714 (இரயில் நிலையம் அருகில், சிவகங்கை), 7555 (EB அலுவலகம் எதிர்புறம் நாட்டரசன்கோட்டை), 7577 (தொண்டி ரோடு, ராகினிப்பட்டி) ஆகிய மதுபானக்கடைகள் மற்றும் TVL.கிங்ஸ் ரெக்ரியேசன் கிளப் (மரக்கடை வீதி, சிவகங்கை), 7 ஸ்டார் விளையாட்டு நற்பணி மன்றம் (நேரு பஜார், சிவகங்கை) ஆகிய தனியார் மதுக்கூடங்கள் முழுவதுமாக மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி தெரிவித்துள்ளார்.