வேலூர், செப். 27 –
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழுத் தலைவர் மற்றும் திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கு. செல்வப் பெருந்தகை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் 28 பயனாளிகளுக்கு ரூ.51.81 இலட்சம் மதிப்பில் நலதிட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் குழு உறுப்பினர்களான போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன், பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி. சேகர், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர். ஜெயராமன், மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆ. மயில்வாகனன், சட்டமன்றப் பேரவைச் செயலக இணைச் செயலாளர் ரமேஷ், துணைச் செயலாளர் பால சீனிவாசன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், துணை மேயர் சுனில் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் த. மாலதி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



