விளாத்திகுளம், செப்டம்பர் 19 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், கே.சுந்தரேஸ்வரபுரம் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வழங்கியுள்ள இடத்தில் ஊராட்சி பொது நிதியின் கீழ் ரூ.21.80 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி கட்டுவதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரஞ்சித், விளாத்திகுளம் திமுக ஒன்றிய செயலாளர்கள் ராமசுப்பு, அன்பு ராஜன், இம்மானுவேல், ஒப்பந்ததாரர் மனோகர் மற்றும் திமுக வார்டு செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள் உட்பட பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.



