சுசீந்திரம், மே 6 –
சுசீந்திரம் அருகே உள்ள சகாயபுரம் இடைவிட சகாய அன்னை திருத்தல திருவிழா நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை மாலையில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி நாளை மறுநாள் காலை 6:30 மணிக்கு திருப்பலியும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை மற்றும் திருக்கொடியேற்றம் நடைபெறுகிறது. திருக்கொடியேற்ற திருப்பலியில் கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரை வழங்குகிறார். திருவிழா வருகிற 17ம் தேதி வரை 10 நாட்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
விழா நாட்களில் தினமும் ஜெபமாலை நவநாள் திருப்பலி நற்கருணை ஆசீர் அன்பியம் பக்தசபை இயக்கங்களின் ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவின் ஒன்பதாம் திருவிழாவான 16ம் தேதி சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு திருப்பலியும் மாலை 6:00 மணிக்கு கோட்டார் மறை மாவட்ட செயலாளர் மரிய கிளாட்சன் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனையும் நடக்கிறது. இதில் மறை மாவட்ட அன்பிய பணிக்குழு செயலாளர் சகாய கிளாசின் மறையுறை வழங்குகிறார். இரவு 8 மணிக்கு தேர் பவனி நடைபெறுகிறது.
திருவிழாவின் நிறைவு நாளான 17 ஆம் தேதி ஞாயிறு 6:30 மணிக்கு திருப்பலியும் காலை 8.00 மணிக்கு மறை மாவட்ட முதன்மை அருட்ப பணியாளர் ஜாண் ரூபஸ் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. இதில் பணி குழுக்களின் ஒருங்கிணைப்பு செயலாளர் எட்மண்ட் மறையுறையாற்றுகின்றார். மாலை 5.00 மணிக்கு திருப்பலியுடன் கொடி இறக்க திருப்பலி நடக்கிறது. திருப்பலிக்கு நம் வாழ்வு துணை ஆசிரியர் ஞானசேகரன் தலைமை தாங்குகிறார். திருப்பலியில் இனையம் இணை பங்கு தந்தை ஜெனிஷ் கவின் மறையுரை வழங்குகிறார். தேவ சகாயம் மவுண்ட் இணைபங்கு தந்தை ஞானராய் இணைந்து ஜெபிக்கிறார். இரவு 8 மணிக்கு பங்கு இறைமக்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை ஜோசப் ரொமால்ட், இணை பங்குத்தந்தை அஜின் ராஜ், பங்கு பேரவை துணைத் தலைவர் சகாய ராஜன், செயலாளர் சகாயராஜ், துணைச் செயலாளர் சபிலா ரோஸ்லின் ஷீபா, பொருளாளர் சர்மிளா பானு மற்றும் பங்கு பேரவையினர் பங்கு மக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.



