கோவை, ஜூன் 18 –
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த அங்குலக்குறிச்சியில் அமைந்துள்ள ரங்கா தமிழ் தர்ம மற்றும் கல்வி அறக்கட்டளை இல்லத்தில் பத்தாம் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் சுமார் 50 க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பைகள், இனிப்பு ஆகியவை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. விழாவில் அறக்கட்டளையின் அறங்காவலர் தமிழ்ச்செல்வி ரங்கநாதன் அவர்கள் தலைமை வகித்தார். வால்பாறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, கிணத்துக்கடவு முன்னாள் சேர்மன் ஏகநாத மூர்த்தி, கோவை தெற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் அசோக்குமார், நெகமம் பெருநகர் கவுன்சிலர் சபரீசன், முதலுதவி சமூக நல அறக்கட்டளைத் தலைவர் முனைவர் அபு.இக்பால் மற்றும் சமூக ஆர்வலர் ச. காளிமுத்து ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு இனிப்புகள் மற்றும் மதிய உணவினை நிறுவனர் சரவணன் அவர்கள் வழங்கி சிறப்பித்தார். இதில் மாணவர்கள் ஊர்ப் பொதுமக்கள் இளைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.