தஞ்சாவூர் மே 3
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளை சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. தஞ்சாவூர் அருகே வல்லத்தைச் சேர்ந்த 45 வயதானவர் ஆண் சாலை விபத்தில் காயமடைந்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்ப ட்டார் .அங்கு சிகிச்சை பெற்றவர் மூளை சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க உறவினர்கள் முடிவு செய்தனர் இதன்படி மூளை சாவு அடைந்தவரி ன் உடல் உறுப்புகள் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தானமாக பெறப்பட்டது. இதில் ஒரு சிறுநீரகம் மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மற்றொரு சிறுநீரகம் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒருவருக்கு பொருத்தப்பட்டது. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்செய்யப்பட்ட 17 வது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை இது. இதே போல கண்கள் தஞ்சாவூர் இராசா மிராசுதாரர் அரசு மருத்துவமனையில் உள்ள கண் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து மூளை சாவு அடைந்தவரின் உடலுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தஞ்சாவூர் கோட்டாட்சியர் இலக்கியா, மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனையடுத்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்க ப்பட்டது.