கன்னியாகுமரி, மார்ச் 16 –
மருங்கூரில் கொளுத்தும் வெயிலில் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் என்டிஏ கூட்டணி பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தை அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் மதியழகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். பேரூர் கழகச் செயலாளர்கள் மருங்கூர் மகேஷ், தேரூர் முத்து, இளைஞரணி நிர்வாகிகள் ரமேஷ், ஆன்றோ போஸ்கோ, நவீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கொழுத்தும் வெயிலில் சுமார் 300க்கு மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் கிளாட்சன், கவுன்சிலர் அழகைசெந்தில் மகளிர் அணி நிர்வாகிகள் ஷீலா, சோனியா, சதா, இந்திராசுதன், நிர்வாகிகள் வெங்கடேஷ், செந்தில்குமார், மணிகண்டன், சதீஷ், மிக்கேல் ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



