திருப்பூர், ஜூலை 27 –
மத்திய அரசின் நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து நடைபெற்ற மெழுகுவர்த்தி பேரணி!!!
வினாத்தாள் கசிவு பிரச்னைக்கு விரைவு நீதிமன்றங்கள் அமைப்பது மட்டுமே முழுத் தீர்வாகாது. இந்தியாவில் பல்வேறு குற்ற வழக்குகளை விசாரிக்க 775 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன. சட்ட அமைச்சகத்தின் தகவலின்படி விரைவு நீதிமன்றங்களில் 2.45 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. விரைவு நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள், பணியாளர்கள், அரசு வழக்கறிஞர்கள், கூடுதல் நிதி வளங்கள் தேவை. போதிய நீதிபதிகள் இல்லாதது, பல பணியிடங்கள் காலியாக இருப்பதில் இதில் உள்ள முக்கிய சவால். அனைத்து பிற வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டால் மட்டுமே விரைவு நீதிமன்றங்களால் பலன் கிடைக்கும் என முன்னாள் சேர்மன் காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தெரிவித்தார்.
பேரணியில் துணைத் தலைவர் கதிரேசன், கே பி ஜி செந்தில்குமார், 48வதுமாமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி கோபால்சாமி,ராமகிருஷ்ணன், கோவிந்தசாமி, முகமது ஹசன், மகிலா காங்கிரஸ் தலைவி ஆஷா, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுக்கும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகளுக்கும் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிய தலைவர் நல்லூர் P. கோபால்சாமி நன்றியினை தெரிவித்தார்.



