குளச்சல், ஜூலை 5 –
மண்டைக்காடு அருகே உள்ள மணலி விளையை சேர்ந்தவர் நாராயண வடிவு மகள் சுனிதா (24). எம் எஸ் சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு நாகர்கோவில் பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த 4 வருடமாக பணிபுரிந்து வந்தார். கடந்த 2-ம் தேதி வேலைக்கு சென்ற சுனிதா பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் சுனிதா குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து சுனிதாவின் தாய் சுசீலா மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.