திருவட்டார், ஜூன் 26 –
திருவட்டார் பகுதியை சேர்ந்தவர் வேதமாணிக்கம் (70). இவரது மனைவி 6 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். 3 பிள்ளைகளுக்கு திருமணம் முடிந்து விட்டதால் வேதமாணிக்கம் தனியாக வசித்து வந்தார். சம்பவ தினம் இவர் திருவட்டார் பகுதியில் பொருள்கள் வாங்க கடைக்கு சென்றுள்ளார். அப்போது சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத பைக் மோதி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். பொதுமக்கள் குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜூன் 23 அன்று வேதமாணிக்கம் உயிரிழந்தார். திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.