ராமநாதபுரம், ஜுலை 18 –
ராமநாதபுரம் மாவட்டம் பாக் ஜலசந்தி வங்காள விரிகுடாவின் ஒரு பகுதியாக இருக்கிறது. இந்த பாக்ஜலசந்தி கோடியக்கரை தொடங்கி ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, மண்டபம் அருகில் உள்ள பகுதியாக இருக்கிறது. இந்த கடலை பெண் கடல் என்று அழைப்பார்கள். கடலில் அலைகள் மிகவும் அமைதியாக சற்று வேகம் குறைந்த அளவிலே உள்ளன. அதனால் கடலை பெண் கடல் என்று அழைக்கிறார்கள். கடலின் சிறப்பு நான்கு வகையான சுற்றுச்சூழலை கொண்டுள்ளது. கடல்பாசிகள், கடல் சதுப்பு நிலக்காடுகள், மற்றும் பவளப்பாறைகள் போன்ற சுற்றுச்சூழலை கொண்டுள்ளது.
மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் எஸ்.பி. பட்டணம் தொண்டி கடற்கரையில் இருந்து பாம்பன் கடல் வரை இந்த இயற்கை சூழல் கடல்வாழ் உயிரினங்களுக்கு உறைவிடமாகவும் உணவாகவும் பாதுகாப்பாகவும் திகழ்கிறது. கடல்பாசியில் நிறைந்து இருப்பதால் இங்கு மீன்வளம் அதிகமாக காணப்படுவதுடன் கடல் வாழ் உயிரனங்கள் அதிக அளவில் உள்ளன. இங்கு உள்ள மீன், நண்டு, இறால், கணவாய் போன்றவை மிகவும் ருசியாக உள்ளதாக இருக்கும்.
மேலும் தொண்டி பகுதிகளில் பிடிக்கப்படும் இறால் மீன் நண்டு கனவாய் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஜப்பான் நாட்டில் கூட தொண்டி (squid) கனவாய் மீன்கள் விரும்பி வாங்கி சாப்பிடுவார்கள். பல்வேறு பகுதிகளிலிருந்து வரக்கூடிய மக்கள் தொண்டி சுற்றுவட்டார கடற்கரை பகுதியில் பிடிக்கக்கூடிய மீன்களை விரும்பி வாங்கி செல்வார்கள். பெரு நகரங்களில் கூட ராமநாதபுரம் மாவட்ட மீன்களுக்கு மதிப்பு அதிகம்.
கடல்பாசிகள் கடல் பொருட்கள் பவளப்பாறைகள் நிறைந்து காணப்படுவதால் மீன்வளம் அதிக அளவில் காணப்படும். மேலும் இந்த இயற்கை சூழலானது கடலோர மக்களுக்கு பாதுகாப்பாகவும் கடலோர மக்கள் வாழ்வாதாரத்திற்காகவும் மற்றும் மீன்வளம் பெருகுவதற்கு இது பெரிய அளவில் பயனுள்ளதாக இருக்கிறது. மேலும் சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பேரழிவிலிருந்து கடலோர மக்களை பாதுகாக்கிறது. கடலில் ஐந்து வகையான பாசிகள் இயற்கையாகவே வளர்கின்றன. அதனால் இங்கு அதிக அளவில் மீன் வளம் காணப்படுகிறது.
இக்கடலில் அரிய வகை உயிரினமான பாதுகாக்க வேண்டிய கடற் பசுக்கள் காணப்படும். கடல் பசுவுக்கு கடற்பாசி உறைவிடமாகவும் உணவாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் இருக்கும். இப்படிப்பட்ட சூழலில் கடல்பாசியை கடலில் இருந்து அதிக அளவில் எடுப்பதால் மீன் வளம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மீனவ மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கும். தொழிற்சாலைகள் அதிக அளவில் கடல்பாசி எடுப்பதால் கடல் வளம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.
இதனை நாம் உடனடியாக சரி செய்ய கடல்பாசியை எந்த அளவிற்கு கடலில் இருந்து எடுக்கிறோமோ அந்த அளவிற்கு அதை வளர்ப்பதற்கு கவனம் செலுத்த வேண்டும். மீன் வளத்தை பாதுகாக்க முடியும். தவறினால் மிகப்பெரிய பாதிப்பிற்கு உள்ளாக்கப்படுவோம். கடல்பாசிகள் பல்வேறு விதங்களில் பயன்படுகிறது. உணவு, விவசாயம், மருந்து தயாரித்தல் உட்பட பலவற்றிற்கு பயன்படுகிறது.
எனவே கடற்பாசி வளர்ப்பதற்கு வளர்த்து அதை அறுவடை செய்வதற்கும் மீனவ மக்களுக்கும். மீன் சார்ந்த தொழில் செய்பவர்களுக்கும். மீனவ பெண்களுக்கும் முறையான பயிற்சிகள் கிராமங்கள் தோறும் கொடுக்க வேண்டும். கடல்பாசி வளர்க்காமல் அறுவடை செய்வதை அரசு தடுக்க வேண்டும். மீனவ மக்கள் நலன் கருதி அரசு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் உரிய நடவடிக்கை எடுத்து வழிகாட்டுதல் செய்ய வேண்டும் என்று தமுமுக மாநில செயலர் தொண்டி சாதிக் பாட்சா கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.



