திருப்பூர், ஜூலை 21 –
தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் அவர்களை மிரட்டும் தோணியிலே பேசிய விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினரை பல் சமய நட்புறவு கழகத்தின் சார்பாக மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம்..
நாகரீகம் கற்றுத் தந்த தமிழகத்தில் அநாகரிகமான பேச்சுக்களுக்கு நுனி அளவும் கூட தமிழக அரசு இடம் கொடுக்கக் கூடாது என்றும் தனி மனித தாக்குதல், தனிமனிதரை கண்ணியக் கூறைவாக பேசுதல், ஏசுதல், இழிவாகப் பேசுதல், இவை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். இது பேச்சு சுதந்திரம் என்று கூறுவார்கள். உண்மையான பேச்சு சுதந்திரம் கண்ணியத்தை காக்க கூடிய விதமாக இருக்கும். யார் மனதையும் புண்படக்கூடியதாக இருக்காது. உண்மையைப் பேசுவார்கள் நடுநிலையோடு பேசுவார்கள். அது தான் பேச்சு சுதந்திரம்.
கடந்த ஆட்சியிலே இப்படிப்பட்ட வர்ம பேச்சுகளுக்கு எல்லாம் இடம் கொடுத்த காரணத்தினால் தற்போது இந்த ஆட்சியிலும் தொடர்ந்து பேசி வருவதை நாம் பார்க்கிறோம். அதுவும் பொது மேடைகளில் இப்படிப்பட்ட பேச்சு யாராக இருந்தாலும் மிகவும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியவர்கள். கடுமையான சட்டத்தின் மூலம் இவர்களை தண்டிக்கப்பட வேண்டும் என்று பல் சமய நட்புறவுக் கழகத்தின் மாவட்ட பொறுப்பாளர் அ. அக்கீம் கண்டன அறிக்கை தெரிவித்துள்ளார்.



