By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்க குமரி நீதிமன்றங்களில் சிறப்பு சமரச தீர்வு மைய முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்க குமரி நீதிமன்றங்களில் சிறப்பு சமரச தீர்வு மைய முகாம்
கனஂனியாகுமரி

நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்க குமரி நீதிமன்றங்களில் சிறப்பு சமரச தீர்வு மைய முகாம்

Last updated: July 4, 2025 6:40 pm
July 4, 2025 3 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 4 –

நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் வருகிற 31-ம் தேதி வரை சமரச தீர்வு முகாம்கள் நீதிமன்றங்களில் நடைபெறுகிறது என்று நீதிபதி உதயசூரியா கூறியுள்ளார். குமரி மாவட்ட சமரச தீர்வு மைய இணை ஒருங்கிணைப்பாளர் நீதிபதி உதயசூரியா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க சமரச தீர்வு மையம் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 2014 ஏப்ரல் முதல் கடந்த மாதம் 30ம் தேதி வரை குமரி மாவட்டத்தில் 7872 வழக்குகள் சமரச தீர்வு மையத்திற்கு வந்துள்ளது. இதில் 904 வழக்குகள் சமரச தீர்வு மைய மூலமாக தீர்வு காணப்பட்டுள்ளது. 4021 வழக்குகளில் சமரசம் ஆகவில்லை. 2616 விளக்குகள் விசாரணைக்கு ஆஜரானவர்கள் விருப்பமில்லை என்று தெரிவித்ததை தொடர்ந்து மீண்டும் கோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

331 வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி கடந்த 1ம் தேதியில் இருந்து சிறப்பு சமரச தீர்வு முகாம் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. தொடர்ந்து 31ம் தேதி வரை இந்த சிறப்பு முகாம் நடக்கிறது. நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மண வாழ்க்கை, சொத்து வழக்கு, பணம் பிரச்சனை, காசோலை வழக்கு, நிதி நிறுவனத்தில் பண பரிவர்த்தனை தொடர்பான வழக்கு, குற்ற வழக்குகளில் சமரசம் ஏற்படக்கூடிய வழக்குகள், மோசடி வழக்குகள், வங்கி தொடர்பான வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் சமரச தீர்வு மையத்தில் தீர்வு காணப்பட உள்ளது.

சமரச தீர்வு மையத்தில் பயிற்சி பெற்ற மீடியேட்டர் மூலம் வழக்குகள் பேசி முடிக்கப்படுகிறது. நாகர்கோவில், தக்கலை, இரணியல், பூதப்பாண்டி, குழித்துறை ஆகிய கோர்ட்டுகளில் இந்த ஒரு மாதமும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தற்பொழுது பெறப்படும் மனுக்கள் செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப்படும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் சமரச தீர்வு மையம் செயல்படும். சமரச தீர்வு மையத்தில் ஆன்லைன் மூலமாகவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த சிறப்பு முகாம் மூலம் அதிகமான வழக்குகளை பேசி முடிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி வழக்குகளை விரைந்து முடித்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

You Might Also Like

பறக்கை மதுசூதனப்பெருமாள் கோவிலில் திருப்பணிகள் துவங்குவதற்கான சிறப்பு பூஜை

நாகர்கோவிலில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்

நா.த.க சார்பில் காவல்துறை விசாரணை மரணங்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

மார்த்தாண்டத்தில் வீட்டு பொருட்களை சூறையாடிய பெண் கைது

வடலிவிளையில் நியாயவிலை கடை கட்டிடம்; எம் எல் ஏ திறப்பு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
தென்காசிமாவட்டம்

மாநில கராத்தே போட்டி பாவூர்சத்திரம்

October 13, 2024 60 Views
சாரதி ராம் அறக்கட்டளைஆடித்தபசு அன்னதானம்
ஊர் பொதுமக்கள் சாலையை சீரமைத்து கேட்டு மனு
ஓமான் நாட்டு கடலில் சிக்கி தவித்த 4 குமரி
தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 812 பேருக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?