நாகர்கோவில், ஜுன். 05-
நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
அதன்படி இன்று (பொ) மேயர் மேரி பிரின்சி லதா தலைமையில், மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா முன்னிலையில் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இம்முகாமில் பொதுமக்களிடம் இருந்து 12 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காண சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மேயர் பிரின்ஸி லதா உத்தரவிட்டார்.
இந்த முகாமில் மாநகர் நல அலுவலர் டாக்டர். சரோஜா, மாநகர் துணை பொறியாளர் ரகுராம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



