திருவட்டாறு, ஜூன் 15 –
திருவட்டாறு அருகே உள்ள பூவன்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயா என்பவர் மகள் ஜென்சிலின் (19). சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். விடுதியில் தங்கி படித்து வந்த இவர் விடுமுறையில் தற்போது ஊருக்கு வந்தார்.
நேற்று ஜென்சிலின் நாகர்கோவில் இருந்து ரயிலில் சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். ரயிலில் ஏறியதும் வீட்டிற்கு தகவல் கொடுத்தவர், அதன் பிறகு பேசவில்லை. பெற்றோர் தொடர்பு கொண்ட போது செல்போன் சுவிட்ச் ஆப் ஆக இருந்துள்ளது. அடுத்த நாள் காலை கல்லூரிக்கு சென்று இருப்பதாக கருதி அவர்கள் கல்லூரியை தொடர்பு கொண்டனர். அப்போது ஜென்சிலின் கல்லூரிக்கு வரவில்லை என தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சென்னையில் உள்ள மகளின் தோழிகள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடினர். இருப்பினும் தகவல் கிடைக்கவில்லை. தொடர்ந்து இது குறித்து தந்தை ஜெயா திருவட்டார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ஜென்சிலினை தேடி வருகின்றனர்.



