By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துகள் சர்வீஸ் சாலையில் பயணிகளை இறக்கி ஏற்ற வேண்டும்; விழுப்புரம் ஆட்சியர் போக்குவரத்துக்கழக அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > விழுப்புரம் > தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துகள் சர்வீஸ் சாலையில் பயணிகளை இறக்கி ஏற்ற வேண்டும்; விழுப்புரம் ஆட்சியர் போக்குவரத்துக்கழக அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
விழுப்புரம்

தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துகள் சர்வீஸ் சாலையில் பயணிகளை இறக்கி ஏற்ற வேண்டும்; விழுப்புரம் ஆட்சியர் போக்குவரத்துக்கழக அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்

Last updated: July 31, 2025 4:15 pm
July 31, 2025 4 Views
Share
SHARE

விழுப்புரம், ஜூலை 31 –

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில் விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் விரிவாக கேட்டறியப்பட்டது.

மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் தற்பொழுது வரை நடைபெற்ற சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை குறித்தும், விபத்துக்கான காரணங்கள் குறித்தும், அப்பகுதிகளில் விபத்து நடைபெறாமல் தடுப்பதற்கான மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் விரிவாக கேட்டறியப்பட்டது.

மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் நடைபெற்றுவரும் உயர்மட்ட மேம்பாலம் மற்றும் சாலை அமைக்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்ததுடன் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பணிகளை மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்திட நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதுமட்டுமல்லாமல் பணிகள் நடைபெறுவது தொடர்பாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் 100 மீட்டர் குள்ளாகவே சாலைப்பணி நடைபெறுவது தொடர்பான தகவல் பலகைகளை அமைத்திட வேண்டும். சாலைப்பணிகள் நடைபெறும் பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் நல்ல முறையில் சர்வீஸ் சாலைகள் இருப்பதை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

மேலும், பேருந்துகள் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி பயணிகளை இறக்கி ஏற்றுவதால் போக்குவரத்து பாதிப்பும், விபத்துகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, பேருந்துகளை சர்வீஸ் சாலைகளில் வந்து பயணிகளை இறக்கி ஏற்றிய பின்னரே மீண்டும் தேசிய நெடுஞ்சாலையில் செல்ல அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு அறிவுரைகள் வழங்கி தேவையான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட வேண்டும் என போக்குவரத்துக்கழக அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் விபத்து ஏற்படும் பகுதிகளில் உடனடியாக வட்டார போக்குவரத்து அலுவலர், காவல் துறை அலுவலர்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ஆகியோர் கூட்டாக பார்வையிட்டு விபத்துக்கான காரணத்தை ஆய்வு செய்து மீண்டும் விபத்து ஏற்படாமல் இருப்பதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து சாலைகளிலும் வேகத்தடை (Speed Breaker) தொலைவில் இருந்தே தெரியும் வகையில் தெர்மோபிளாஸ்ட் பெயிண்டால் கோடுகள் வரைந்திருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

அதேபோல், பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அனைத்து சாலைகளிலும், தகவல் பலகை (Sign Boards), வாகன நிறுத்திட பலகை (Parking Boards) தேவையான இடங்களில் அமைக்கப்பட வேண்டும். சந்திப்பு சாலைகளில் (Junction Point) மேம்படுத்திடவும், தேவையான இடங்களில் ஆய்வு செய்து உயர்கோபுர மின் விளக்குகள் (Highmas light) அமைத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். திசைகாட்டும் பலகைகளை (Sign Boards) 50 மீட்டருக்கு முன்னரே நிறுவுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. எனவே, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு விழுப்புரம் மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக உருவாக்கிட ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப. சரவணன், உதவி இயக்குநர் (குற்றப்பிரிவு) கலா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் உட்பட துறை சார்ந்த அலுவவர்கள் கலந்துகொண்டனர்.

You Might Also Like

கல்வியும் சுகாதாரமும் முதல்வரின் இரு கண்கள்; நலன் காக்கும் ஸ்டாலின் தொடக்க விழாவில் பொன்முடி பேச்சு

திருவெண்ணெய்நல்லூர் அருகே எரளூர் முதல் மனக்குப்பம் வரை அரசு பஸ் போக்குவரத்து; முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்

திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் ஆடி சுவாதியை முன்னிட்டு சுந்தரர் குருபூஜை

திருவெண்ணெய்நல்லூர் மாவட்ட செயலாளரை சந்தித்து வாழ்த்து பெற்ற புதிய நகர மாணவரணி நிர்வாகிகள்

கம்மந்தூர் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கரூர்மாவட்டம்

கரூர் சாலை (வழி) மைலம்பட்டி உப்பிடமங்கலம் சாலையில்

September 9, 2024 27 Views
தேசிய சாலை பாதுகாப்பு மாதம்
வாராந்திர மக்கள் குறை தீர்வு கூட்டம்
முபாரக் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க
பூதப்பாண்டி அருகே பாம்பு கடித்து மூதாட்டி பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?