திருவள்ளூர், செப். 01 –
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தமிழக முதல்வர் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனைப்படி தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், மாவட்டச் செயலாளர் மற்றும் சிறுபான்மை துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் ஆகியோர் இணைந்து பூவிருந்தவல்லி, அறிஞர் அண்ணா அரசு பள்ளியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் வேலை வாய்ப்பு முகாமை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றி பணி ஆணைகளை வழங்கினார்கள்.
உடன் மாவட்ட ஆட்சியர் பிரதாப், இயக்குனர் விஜயா, சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண சாமி, கிழக்கு மாவட்ட செயலாளர் ரமேஷ் ராஜ் மற்றும் ஜெரால்டு, நகர செயலாளர் ஜி.ஆர். திருமலை, ஒன்றியச் செயலாளர் கமலேஷ், தலைவர் காஞ்சனா சுதாகர், துணை தலைவர் ஶ்ரீதர் மற்றும் கழக நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.



