திருப்பத்தூர், ஆக. 3 –
திருப்பத்தூர் மாவட்டம் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 08 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.96,325 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கு.ரவிகுமார் வழங்கினார். மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கு.ரவிகுமார், பொதுமக்களிடமிருந்தும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இக்கூட்டத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முதன்மைதிட்டமான உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் வரபெற்ற மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என அனைத்துத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டார். மேலும் வருவாய் துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சித்துறை, வனத்துறை, நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்றுவாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, மின்துறை சார்பான குறைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள், மருத்துவத்துறை, கிராம பொதுப்பிரச்சனைகள், குடிநீர் வசதி மற்றும் பொது நலன் குறித்த மனுக்கள் என மொத்தம் 228 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், 04 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.14,500/- மதிப்பிலான கைத்திறன்பேசியும், 01 மாற்றுத்திறனாளிக்கு ரூ.6,359/- மதிப்பிலான தையல் இயந்திரமும், 01 மாற்றுத்திறனாளிக்கு ரூ.15,750/- மதிப்பிலான சக்கர நாற்காலியும், 01 மாற்றுத்திறனாளிக்கு ரூ.9,000/- மதிப்பிலான (Commode Wheel Chair), 01 மாற்றுத்திறனாளிக்கு ரூ.7,216/- மதிப்பிலான (Corner Chair) என மொத்தம் 08 நபர்களுக்கு ரூ. 96 ஆயிரத்து 325/- மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கு.ரவிகுமார் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பாலசுப்ரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சௌ. தமிழரசி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) பூஷணகுமார், உதவி ஆணையர் (கலால்) வேடியப்பன், மாவட்ட வழங்கல் அலுவலர் சீனிவாசன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தாமரைமணாளன், உதவி இயக்குநர்கள் ஊராட்சிகள் (தெற்கு) மகாதேவன், (வடக்கு) முருகன், மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலர் செந்தில்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கண்ணன், அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.



