திண்டுக்கல், ஜூன் 24 –
திண்டுக்கல்லில் தமிழ்நாடு உயர்நிலை – மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பாக பணி நிறைவு பாராட்டு விழா, புதிய நிர்வாகிகள் அறிமுக விழா , போராட்டங்களில் சிறை சென்றோருக்கான பாராட்டு விழா என முப்பெரும் விழா நிகழ்ச்சி திண்டுக்கல் பிச்சாண்டி மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் தோ. பிரான்சிஸ் பிரிட்டோ தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட சட்ட செயலாளர் ப. குரு ராமன், மாவட்ட செய்தி தொடர்பு செயலாளர் இரா. முத்துப்பாண்டி, மாவட்ட மகளிரணி செயலாளர்கள் ஆ. ரதிதேவி, ஆ. கவிதா, மாவட்ட துணை தலைவர்கள் ப. துக்கையண்ணன், ஜோ. சுவக்கின்அமல்ராஜ், மு. பரக்கத்துல்லா, மாவட்ட இணை செயலாளர்கள் மு. வடிவேல், சீ. வெள்ளையன், இரா. செந்தில்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் க. ஜெகதீஷ்குமார், அ. ஷாஜகான், த. அலெக்ஸ், கு. முருகன், சி. தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். மாவட்டச் செயலாளர் லூ. செல்மா பிரியதர்சன் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நிறுவனத் தலைவர் முனைவர் அ. மாயவன் பணி நிறைவை பாராட்டி வாழ்த்துரை ஆற்றினார். இந்நிகழ்வில் மாநில ஆலோசகர் எஸ். பக்தவச்சலம், மாநிலத் தலைவர் சி. ஜெயக்குமார், மாநில பொதுச் செயலாளர் மா. குமரேசன், மாநில பொருளாளர் ம. விஜயசாரதி, மாநில துணை பொதுச்செயலாளர் எம். மாயகிருஷ்ணன், மாநில செய்தி தொடர்புச் செயலாளர் சு. நல்லதம்பி, மாநில துணைத்தலைவர் என். ஸ்ரீரங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டு இயக்க வாழ்த்துரை ஆற்றினார்கள். நிகழ்ச்சியின் போது திண்டுக்கல் மாவட்டத் தலைவர் தோ. பிரான்சிஸ் பிரிட்டோ, திண்டுக்கல் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சி. ஜான் லியோ சகாயராஜ் ஆகியோருக்கு சிறை சென்றவர்களுக்கான நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் பணி நிறைவு பாராட்டு பெறுபவர்கள் விவரம்: ரா. அப்துல் அஜீஸ், டி. ஜெயலட்சுமி, ஆர். லதா, சு. ராஜேந்திரன், டி. சுப்பிரமணியன், பிடிஎஸ். கோவிந்தராஜன், அ. ராசு, கே. பசுங்கிளி, வெ. பழனிச்சாமி, இ. ஜாக்லின்மேரி, அ. சிவராஜ், பி. ராஜேஸ்வரி, கே. மீனலோட்சனி, சு.அங்கப்பன், எஸ். அலெக்சாண்டர், சு. செல்லப்பாண்டி, ப. கணேசன், வி. ஜோதிமணி, வி. கிறிஸ்டினா உரோசற்றி, க. ஜானகி ஆகியோர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் புதிய நிர்வாகிகள் அறிமுகப்படுத்தப்பட்டனர். இந்நிகழ்வில் மாநில பொருளாளர் டி. கணேசன் , மாநில இணைச் செயலாளர் எம். இராஜரத்தினம் , திண்டுக்கல் வட்டத் தலைவர் எஸ். ஜேம்ஸ், மாவட்டத் தலைவர் எஸ். முபாரக் அலி, மாவட்டச் செயலாளர் ம. சுகந்தி உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் போது தமிழ்நாடு அரசு எந்தவித நிபந்தனை இன்றி அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும், 2025 எதிர்வரும் பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வில் மணவிலக்கு பெற்ற பெண் ஆசிரியர்களுக்கு வழங்கி வந்த முன்னுரிமையை ரத்து செய்யாமல் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிகழ்ச்சியின் முடிவில் மாவட்டப் பொருளாளர் செ. செந்தில்குமார் நன்றி கூறினார்.