தென்தாமரைக்குளம், ஆக. 22 –
பா.ஜ., ஐ.டி.விங் நிர்வாகியும், தென் தாமரைகுளம் பேரூராட்சி கவுன்சிலருமான சுபாஷ் விடுத்துள்ள செய்தி குறிப்பில்: மதுரையில் நடந்த தவெக மாநாட்டில் ரேம்ப் வாக்கில் கிரீஸ் தடவியது அக்கட்சியின் தரத்தை வெளிக்காட்டுகிறது. நிர்வாகிகள், தொண்டர்களுக்கு விஜய் அளிக்கும் முக்கியத்துவம் தான் இது.
அதையும் தாண்டி குதித்து சென்ற அணில் கூட்டங்கள் எப்போது திருந்த போகிறார்கள் என்று தெரியவில்லை. இதைவிட கூட்டங்கள் பலமடங்கு கூட்டிய அரசியல் கட்சி தலைவர்கள் இப்போது தடம் தெரியாமல் போய் விட்டனர். கட்சியை தனியார் கம்பெனிக்கு அடகு வைத்துவிட்டு கிளிப்பிள்ளை போல் அவர்கள் எழுதி கொடுப்பதை வாசிக்கும் விஜய்க்கும் அதே நிலைதான் ஏற்படும்.
ரசிகர்கள் மூலம் கோடி கோடியாய் பணம் சம்பாதித்த விஜய் இன்று தனது சொந்த ரசிகர்கள், நிர்வாகிகளுக்கே மாநாட்டில் உணவு, குடிநீர், கழிவறை போன்ற எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்கவில்லை. இவரா தமிழக மக்கள் நலன் காக்க போகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



