தருமபுரி, ஆகஸ்ட் 30 –
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ் தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். கவிதா, கோபாலபுரம் சுப்ரமணிய சிவா, கூட்டுறவு சர்க்கரை ஆலை செயலாட்சியர் / மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். பிரியா, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் (பொ) சித்ரா, தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் எஸ். மலர்விழி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சரவணன், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை துணை இயக்குநர் பாத்திமா உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.



