தருமபுரி, மே 07 –
தருமபுரி மாவட்ட இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மத்திய அரசயை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் தருமபுரி பி எஸ் என் எல் அலுவலகம் அருகில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வணிக சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், ரயில்வே துறையில் ஆட் குறைப்பு செய்வதை கைவிட கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் விடுதலை சிறுத்தை கட்சியின் தருமபுரி மைய மாவட்ட செயலாளர் த.கு .பாண்டியன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கலைச்செல்வன், சிசுபாலன் மற்றும் இடதுசாரி, விடுதலை சிறுத்தை கட்சிகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



