தருமபுரி, ஜூலை 30 –
தருமபுரி மாவட்டம் முக்கல் நாயக்கன்பட்டி ஊராட்சி கீழ் இராஜ தோப்பு, மேல் இராஜா தோப்பு கிராமத்தில் உள்ள ஸ்ரீ புள்ள குட்டி மாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இத்திருவிழா 29-7-2025 செவ்வாய்க்கிழமை அதிகாலை சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து அம்மனுக்கு கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
30/7/2025 புதன்கிழமை தாரை தப்பட்டை, மேளதாளம், பம்பை வாத்தியம் முழங்க ஸ்ரீ விநாயகர் திருக்கோவிலில் இருந்து ஸ்ரீ மாரியம்மன் கோவில் வரை கீழ் இராஜா தோப்பு, மேல் இராஜா தோப்பு பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பூ கரகம், தீச்சட்டி, மாவிளக்கு எடுத்துக்கொண்டும், அலகு குத்தியும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இவ்விழாவில் ஊர் பொதுமக்கள் மற்றும் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.