தருமபுரி, மே 21 –
தருமபுரியில் பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு முடிவுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா வெளியிட்டார். தருமபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 317 பள்ளிகளைச் சேர்ந்த 10,895 மாணவர்கள், 9,584 மாணவிகள் என மொத்தம் 19,919 பேர் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை எழுதினார்கள். இவர்களில் 9,477 மாணவர்கள், 9,284 மாணவிகள் என மொத்தம் 18,711 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி 93.94% ஆகும். மாவட்டத்தில் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி 96.31% இருந்தது. கடந்த ஆண்டு ஒப்பிடும்போது இந்தாண்டு தேர்ச்சி விகிதம் 2.37% குறைந்துள்ளது. தருமபுரி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியவர்களில் 91.7% மாணவர்களும், 96.35% மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்களை விட மாணவிகள் 4.65 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். தருமபுரி மாவட்டம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி சதவீதத்தில் அடிப்படையில் கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் 9வது இடத்தை பிடித்திருந்தது. இந்த ஆண்டு தேர்ச்சி சதவிகிதம் குறைந்துள்ளதால் மாநில அளவில் 23வது இடத்தை பிடித்துள்ளது.


