By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் பெரிய கோவிலில் பெருவுடையார் – பெரியநாயகி அம்மனுக்கு திருக்கல்யாணம்; ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் பெரிய கோவிலில் பெருவுடையார் – பெரியநாயகி அம்மனுக்கு திருக்கல்யாணம்; ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
தஞ்சாவூர்

தஞ்சாவூர் பெரிய கோவிலில் பெருவுடையார் – பெரியநாயகி அம்மனுக்கு திருக்கல்யாணம்; ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

Last updated: July 11, 2025 3:14 pm
July 11, 2025
79 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 11 –

தஞ்சாவூர் பெரிய கோவிலில் பெருவுடையார் – பெரியநாயகி அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தஞ்சாவூர் பெரிய கோயில் உலகப் பிரசித்தி பெற்ற கோவிலாகும். தமிழர்களின் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. மாமன்னன் ராஜராஜ சோழனால் வானளாவிய உயர்ந்த விமானத்துடன் எழுப்பப்பட்ட கோவிலில் பெரியநாயகி உடனாகிய பெருவுடையார் எழுந்தருளியுள்ளார்.

கோவிலில் ஆண்டு தோறும் பெருவுடையார் – பெரிய நாயகி அம்மனுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறுவது வழக்கம். இந்த திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டால் திருமண தோஷம் உடையவர்கள் தோஷங்கள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம். அதன்படி இந்த ஆண்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பழங்கள், குங்குமம், மஞ்சள்கிழங்கு, திருமாங்கல்ய சரடு, வளையல், சீப்பு, குங்குமச்சிமிழ், கண்ணாடி, இனிப்பு வகைகள், புஷ்பம் தாம்பூலம், ரவிக்கை துணி, வெற்றிலை, பாக்கு போன்ற சீர்வரிசை தட்டுகளுடன் சொக்க நாதர் சன்னதியில் இருந்து புறப்பட்டு நடராஜர் முன் மண்டபத்திற்கு வந்தனர்.

இதை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க மாப்பிள்ளை அழைப்பு உள்ளிட்ட சடங்குகள் நடைபெற்றன. தொடர்ந்து ஹோமம் முடிவடைந்த பிறகு பெரிய நாயகி அம்மனுக்கு மாங்கல்யம் அணிவிக்கப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. தொடர்ந்து பெரியநாயகி சமேத பெருவுடையார் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருமணம் நடைபெறாத இளைஞர்கள், இளம்பெண்களுக்கு பெரியநாயகி அம்மனுக்கு சாத்தப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, உதவி ஆணையர் கவிதை, கண்காணிப்பாளர்கள் ரவி, சத்யராஜ் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் உடனிருப்பவர்களுக்கு தங்கும் இடம் மாவட்ட கலெக்டர் திறந்து வைத்தார்
தஞ்சாவூர் அருகே திருவையாறு ஐய்யாரப்பர் கோயிலில் ஆடிப்பூர விழாவில் அப்பர் சரித்திரம் கைலாய காட்சி நாடகம்
தஞ்சாவூரில் காரல் மார்க்ஸ் பிறந்தநாள் விழா
தஞ்சாவூர் மாவட்டத்தில் பொது வேலை நிறுத்தத்தையொட்டி 8 இடங்களில் தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டம்
18,19 வயது நிரம்பிய வர்களை விடுபடாமல் சேர்க்க வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

இம்மானுவேல் சேகரனாருக்கு புகழஞ்சலி

October 11, 2024
59 Views
கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் மனு
வெங்கட்ரமணா சுவாமி கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
குப்பைகளை கொட்ட இடம் இல்லாமல் தவிக்கும் நிலவை பேரூராட்சி
ஈரோட்டில் கொங்கு நாடு மக்கள் கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account