தஞ்சாவூர், பிப்ரவரி 26 –
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் அயல்நாட்டு தமிழ் கல்வி துறை சார்பில் பேராசிரியர் வை முருகேசன் சிவஞான போதப் பேருரை நூல் அறிமுக விழா நடைபெற்றது. விழாவிற்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்பு குழு உறுப்பினர் பாரத ஜோதி தலைமை வகித்தார்.
பதிவாளர் (பொ) பன்னீர் செல்வம் வாழ்த்துரையாற்றினார் இந்நூலை அமெரிக்கா ஹார்ட்வர்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கை புரவலர் எஸ் .திருஞானசம்பந்தம் ஜெயலட்சுமி சம்மந்தம் அறிமுகம் செய்து வைத்தனர்.
இந்நூலை பேராசிரியர் கு.வே. பாலசுப்பிரமணியன் திறனாய்வு செய்து பேசுகையில்: தமிழர் மரபில் தோன்றிய சைவ சித்தாந்தத்துக்கு எதிராகப்பல்வே று வகையில் முகிழ்த்த கருத்துகளுக்கு பதிலுரையாக மெய் கண்டார் எழுதிய திருஞான போதம் அமைந்தது ஐரோப்பியர்களும் கற்று வரும் இந்நூல் குறித்து தமிழக மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.
நூலாசிரியரின் மகள் ஞான பூங்கோதை ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் சுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக வளர்தமிழ்ப்புல முதன்மையர் குறிஞ்சி வேந்தன் அனைவரையும் வரவேற்றார். அயல்நாட்டு கல்வி துறை இணை பேராசிரியர் பழனிவேலு நன்றி கூறினார்.



