தஞ்சாவூர், மே 8 –
தஞ்சாவூரில் விலைவாசி உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் ரயிலடி தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சக்தி வேல், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் இடிமுரசு இலக்குமணன் ஆகியோர் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும் வகையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டிப்பதும் விலைவாசி உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். ரயில்வே துறையில் பணியிடங்களில் குறைத்து இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மனோகரன், ஜெயபால், செந்தில்குமார், கண்ணன், அருளரசன் கலைச்செல்வி, மாநகர செயலாளர் வடிவேலன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் பணி குழு மாநில செயலாளர் விவேகானந்தம் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் சந்திரகுமார், தில்லை வனம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



