தஞ்சாவூர், ஜூன் 20 –
தஞ்சாவூரில் ஓவியம் சிற்பக்கலை கண்காட்சி நடைபெற உள்ளதால் படைப்புகளை அனுப்ப அடுத்து மாதம் ஜூலை 15 ந்தேதி கடைசி நாளாகும். தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் கலை பண் பாட்டுத்துறை சார்பில் ஓவியம், சிற்பக்கலையை வளர்த்திடும் நோக்கத்திலும், அக்கலையில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஊக்கு விக்கும் நோக்கத்திலும், ஓவியம் மற்றும் சிற்பக் கலைகண்காட்சி யை தஞ்சாவூர் மண்டல அலுவலக த்தில் நடத்த திட்டமிட்டு செயல் படுத்தி வருகிறது.
ஓவியம் மற்றும் சிற்பக்கலை கண்காட்சிக்கு கலைஞர்கள் தங்களது மரபு வழி நவீன பாணி ஓவியங்கள், தஞ்சை ஓவியங்கள், அனைத்து வகையான சிற்ப படைப்புகளையும் வழங்க வேண்டும். அனைத்து ஓவியம் மற்றும் சிற்பக்கலை படைப்புகளும் கண்காட்சியில் காட்ட காட்சிப்படுத்தப்படும். அக்கலை படைப்புகள் அனைத்தும் மண்டல கலை பண்பாட்டுத்துறை மைய உதவி இயக்குனர் அளவில் ஒரு வல்லுனர் குழு அமைக்கப்பட்டு தேர்வு செய்யப்படும்.
அதில் முதல் பரிசாக 7 கலைஞர்களுக்கு தலா ரூபாய் 5000, 2ம் பரிசாக 7 கலைஞர்களுக்கு ரூபாய் 3000, 3ஆம் பரிசாக 7 கலைஞர்களுக்கு தலா ரூபாய் 2000ம், சான்றிதழும் வழங்கப்படும்.
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓவியம், சிற்பக் கலைஞர்கள் தங்களை படைப்புகளை தன் விவர குறிப்புடன் படைப்புகளின் எண்ணிக்கை விவரங்களுடன் தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி மண்டல கயிறு வாரியம் அருகில் உள்ள மண்டல பண்பாட்டு மைய உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு அடுத்த மாதம் ஜூலை 15ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.



