தக்கலை, ஜூன் 26 –
குமரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் தக்கலையில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் ரத்ததானம் முகாம் ஜூன் 26 அன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங், இளைஞர் காங்கிரஸ் தலைவர் சாஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் எம்எல்ஏ ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கோசல்ராம் மற்றும் டாக்டர் கோலப்பன் தலைமையில் இரத்த வங்கி குழு அலுவலர் ராஜன் முன்னிலையில் ரத்தம் சேகரிக்கப்பட்டது. மொத்தம் 25 பேர் ரத்த தானம் செய்தனர். நிகழ்ச்சியில் காங்கிரசார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.