சேலம், ஜூலை 27 –
சேலம் மாநகரில் அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் சேலம் மாநகர் மற்றும் மாவட்டத்தில் திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்படும்.
இந்த வருடமும் அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 05.08.2026 புதன்கிழமை அன்று உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உள்ளூர் விடுமுறை அன்று அரசு பாதுகாப்புக்காக அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு அன்றைய தினம் சேலம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.
இந்த உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக சேலம் மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 08.08.2026 சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் கூறினார்.


