திருச்சி, மே 18 –
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத்தலங்கள் அருகே உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவிட்டார். இந்த உத்தரவைத் தொடர்ந்து, திருச்சி ரயில் நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைகள் உட்பட நான்கு டாஸ்மாக் கடைகள் நேற்று மூடப்பட்டன. இது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.



