இல்லத்தரசிகளின் தொழில் முனைவு சாதனைகளை அங்கீகரித்தும் அவர்களை ஊக்குவித்தும் சுய சக்தி மற்றும் ஹோம் பிரெனர் விருதுகள் வழங்கும் விழா சக்தி மசாலா மற்றும் பிராண்ட் அவதார் சார்பில் சென்னையில் நடைபெற்றது.
பிராண்ட் அவதார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஹேமச்சந்திரன் தலைமையில் நடந்த இந்த விழாவில் சக்தி மசாலா நிறுவனர் பி சி துரைசாமி இயக்குனர் சாந்தி துரைசாமி ஆகியோர் முன்னிலை வைத்தனர் .
இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜமோகன், நிதி அமைச்சர் மரிய வில்சன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இதில் சௌமியா அன்புமணி எம். எல். ஏ .உள்பட 3 சுய சக்தி விருதும் ஈரோட்டை சேர்ந்த சௌந்தர்யா லட்சுமி உட்பட 9 பேருக்கு ஹோம்பிரேனர் விருதும் வழங்கப்பட்டது. மேலும் சுயசார்பு மகளிர்களுக்கு பல்வேறு தலைப்புகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பிரவீன் சக்கரவர்த்தி எம். பி. நடிகர் சூரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


