கோவில்பட்டி, செப். 08 –
கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி, கயத்தாறு யூனியன், வடக்கு கோனார் கோட்டை கிராமத்தில் நடைபெற்ற அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஸ்ரீ கொம்மண்டியம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஊர் பொதுமக்கள் மற்றும் கோவில் தர்மகஸ்தா அவர்களின் அழைப்பின் பேரில் திமுக சார்பில் சிறப்பு விருந்தினராக மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். கோனார் கோட்டை பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் அவருக்கு மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தார்கள்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அன்னதானம் நிகழ்ச்சிக்கு மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் நிதி உதவி வழங்கினார். இந்நிகழ்வில் செட்டிகுறிச்சி பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணசாமி, ஓலைகுளம் திமுக இளைஞரணி மணிகண்டன், கோனார் கோட்டை வெள்ளத்துரை, ராஜா புதுக்குடி பால்ராஜ் மற்றும் திமுக கிளை கழக செயலாளர் முருகன், மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள், இளைஞர்கள், திரளானோர் கலந்து கொண்டனர்.



