By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி வரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பு வரவேற்பு; அதிமுக தீர்மானம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி வரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பு வரவேற்பு; அதிமுக தீர்மானம்
கனஂனியாகுமரி

குமரி வரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பு வரவேற்பு; அதிமுக தீர்மானம்

Last updated: August 9, 2025 8:02 pm
August 9, 2025
19 Views
Share
SHARE

திருவட்டார், ஆக. 9 –

குமரி மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ஜெயசுதர்ஷன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் சிவகுற்றாலம், மாவட்ட இணை செயலாளர் மேரி கமலபாய், துணை செயலாளர்கள் சலாம் அல்போன்சாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவவரும், கழக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் எழுச்சி பயணமான மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார எழுச்சி பயணம் குமரி மாவட்டம் வரும் போது அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க வேண்டும் என்றும், கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள பூத் கமிட்டிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில அமைப்பு செயலாளரும், குமரி மேற்கு மாவட்ட பொறுப்பாருமான சின்னத்துரை பேசியதாவது: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. தமிழகத்தில் பணியாற்றும் போலீசாருக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. எட்டு மாதத்தில் 5 போலீசார் வெட்டி கொல்லப்பட்டனர். இதுவரை தமிழகத்தில் எந்த ஆட்சியிலும் நடந்தது இல்லை. தினமும் பாலியல் வன்கொடுமை, பள்ளிகூடங்களில் படிக்கும் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை. ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் கூட பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இந்த ஆட்சியை தமிழகத்தில் இருந்து விரட்டுவதற்கு பெண்கள் தயாராகி விட்டனர்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முதல்வரின் கட்டுபாட்டில் இல்லை குடும்ப ஆட்சியில் 3 அதிகார மையத்தின் கையில் உள்ளது. தமிழகத்தில் தினமும் என்ன நடக்கிறது என்று முதல்வருக்கே தெரியவில்லை. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் போதை பொருள்கள் அதிக அளவில் நடமாடுகிறது. தொடக்க பள்ளி அளவில் கூட மாணவர்களிடையே போதை பொருள்கள் சர்வ சாதரனமாக விற்கபடுகிறது. தமிழகம் முழுவதும் கனிம பொருள்கள் வெட்டி கடத்தப்படுகிறது இதனால் உள்ளூர் பகுதி மக்களுக்கு கனிமவள பொருள்கள் கிடைக்கவில்லை. கட்டிடம் வீடுகள் கட்டுவதற்க்கு முடியவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்கள் முடக்கப்பட்டு உள்ளது. ஏழை குடும்பத்தார் அதிக விலை கொடுத்து சிமெண்ட் வாங்க வேண்டிய நிலை உள்ளது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடவுள் மறுப்பு கூறி வருகிறார். ஆனால் அவரது மனைவி துர்கா ஒவ்வொரு இந்து கோவில்களில் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்.

வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அந்த ஆண்டவனே இந்த ஆட்சியை காப்பாற்ற மாட்டார்கள் அந்த அளவிற்க்கு தமிழகத்தில் கொடுங்கோல் ஆட்சி நடக்கிறது. தனது மகன் உதயநிதி ஸ்டாலினை தான் அடுத்த முதல்வர் ஆக்க மு .க ஸ்டாலின் முயற்சி செய்கிறார். அரசு ஊழியர்கள் தினமும் தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர் தேர்தல் அறிவிக்கையில் அறிவித்த அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் தமிழக முதல்வர் ஒவ்வொரு பகுதியாக சென்று நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறி மாணவர்களை நம்ப வைத்தனர் இதை நம்பி ஒட்டு போட்ட மாணவர்களின் கனவு கேள்வி குறியாக உள்ளது. திமுக ஆட்சியால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது வரும் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது இதை தான் மீண்டும் கொண்டு வருவார்கள் எனவே மாணவர்கள் கவணம்மாக இருக்க வேண்டும்.

அதிமுக ஆட்சியில்தான் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு வந்த பிறகுதான் இன்று அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு டாக்டர் படிக்கும் வாய்ப்பு கிடைத்து. அனைத்து அரசு அலுவலங்களில் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. எந்த அலுவலங்களிலும் லஞ்சம் கொடுக்கவில்லை என்றால் எதுவும் நடைபெறாது. முதியோர்களுக்கு மாத உதவி தொகை பெறுவதற்கான ஆணை வழங்கிய பிறகும் சுமார் 18 மாதங்களாக அவர்களுக்கு கிடைக்கவில்லை. அரசு மருத்துவமனைகளில் போதிய அளவு அரசு மருத்துவர்கள் இல்லை இதனால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். தென் மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் மக்களை காட்போம் தமிழகத்தை மீட்போம் என்ற எழச்சி பயணத்தில் மக்கள் அலைகடலென திரண்டு வந்ததே இதற்கு சாட்சி. இவ்வாறு பேசினார்.

கூட்டத்தில் அணி செயலாளர்கள் சக்கீர் உசேன், ரஞ்சித்குமார், கிளாடிஸ்லில்லி , யூஜின்,ஒன்றிய செயலாளர்கள் ஜீன்ஸ், மெர்லின்ட்தாஸ், நிமால், மணி, நகர செயலாளர்கள் மணிகண்டன், அழகுராஜா, பேரூர் செயலாளர்கள் மோகன்குமார், விஜுகுமார், ஜெஸ்டின்ராஜ், ரவீந்திரன், ரமேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சிஎஸ்ஐ பேராலய அலுவலகத்தில் பெண் போதகர் உள்ளிருப்பு போராட்டம்.
நித்திரவிளை அருகே தலையில் கல்லால் அடித்து கிட்டாச்சி ஆபரேட்டர் கொலை; ரவுடி உட்பட 5 பேர் கும்பலுக்கு போலீஸ் வலை
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் ஆஞ்சநேயருக்கு மூல நட்சத்திரத்தை முன்னிட்டு முழு உருவ வெள்ளிஅங்கி சாத்தப்பட்டது
குமரி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; போலீசார் தீவிர சோதனை
கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் டிரைவர் உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

நடைக்காவு ஊராட்சியில் ரூ. 1.20 கோடியில் சாலை பணிகள் எம்எல்ஏ துவக்கினார்

July 5, 2025
47 Views
பரமக்குடி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
மயிலாடுதுறையில் மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நல சங்கம் சார்பில் கொடியேற்றி இனிப்புகள் மற்றும் நீர்மோர் வழங்கி கொண்டாட்டம்.
மருத்துவமனை சார்பாக விழிப்புணர்வு பேரணி
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account