மார்த்தாண்டம், ஆக. 18 –
குமரி மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர் ஜெயசுதர்ஷன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் சிவகுற்றாலம், மாவட்ட இணை செயலாளர் மேரி கமலபாய், துணை செயலாளர்கள் சலாம், அல்போன்சாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாநில அமைப்பு செயலாளரும், குமரி மேற்கு மாவட்ட பொறுப்பாளருமான சின்னத்துரை கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 9 பேர் கொண்ட பூத் நிர்வாகிகள் அமைக்கும் பணி 90 சதவீதம் நிறைவடைந்து விட்டது. இன்னும் ஒரு மாதத்தில் விளவங்கோடு, கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி பூத் நிர்வாகிகள் அமைக்கும் பணி முடிவடைந்து விடும். அனைத்து பணிகளும் முடிவடைந்த உடன் கழக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் பூத் நிர்வாகிகள் பட்டியல் ஒப்படைக்கப்படும் என்று சின்னத்துரை பேசினார்.
தொடர்ந்து மாற்று கட்சியினர் அதிமுகவில் இணைப்பு நிகழ்ச்சி நடந்தது. மதிமுக பத்மநாபபுரம் நகர செயலாளர் ராஜா, நாம் தமிழர் கட்சி சுற்று சூழல் பாசறை மாவட்ட இணை செயலாளர் அஜின், உறுப்பினர் ஸ்டாலின், அமமுக விலவூர் பேரூர் கிளை செயலாளர் ராமசாமி, திமுக விலவூர் பேரூர் கிளை செயலாளர் சுனில்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் சுமார் 25க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர்.
அதிமுகவில் இணைத்துக் கொண்ட அனைவருக்கும் மாநில அமைப்பு செயலாளர் சின்னத்துரை சால்வை அணிவித்து வரவேற்றார். விலவூர் பேரூர் செயலாளர் புரூஸ்லி கோபால் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் நிமால், மெர்லின்ட் தாஸ், மணி, ஜீன்ஸ், ஜார்ஜ், நகர செயலாளர்கள் அழகுராஜா, ஆன்றோ, மணிகண்டன், மாவட்ட அணி செயலாளர்கள் சக்கீர் உசேன், மனோ, ராஜாபீட்டர், ஜாண், ரஞ்சித்குமார், ஷன்ஜோஸ், யூஜின், அருள்பிரகாஷ்சிங், கிளாடிஸ் லில்லி, பேரூர் செயலாளர்கள் மோகன்குமார், விஜூ குமார், ரமேஷ், ரவிந்திரன், வினோத் டானியல், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் சுமன், திருவட்டார் பணிமனை அதிமுக செயலாளர் சதீஸ், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர்கள் செந்தமிழ்வாசன், குமார், ஒன்றிய துணை செயலாளர் ஜெயதாஸ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளர் ஷாஜின், மாவட்ட மகளிரணி தலைவர் மரியமதனாள் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



