கிருஷ்ணகிரி, ஜூன் 17 –
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த மூக்காண்டபள்ளி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் மகன் குமரேசன் என்பவரிடம் சிகரலப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ரகு, சுரேஷ் என்பவர்கள் கடனாக வாங்கிய ரூ. 1 கோடியே 3 இலட்சம் மற்றும் 30 இலட்சத்து 50 ஆயிரம் சீட்டு பணம் மேலும் தனியார் பைனான்ஸில் வாங்கி கொடுத்த 1 இலட்சத்து 75 ஆயிரம் பணத்தைக் கேட்டதற்கு திருப்பிக் கொடுக்காமல் கொலை மிரட்டல் விடுக்கும் சிகரலப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ரகு, சுரேஷ், கனகராஜ், சரசம்மா, முனிரத்தினம், சிவகுமார், கோவிந்தன் மற்றும் ரகுவின் கூட்டாளிகள் பெயர் தெரியாத இரண்டு நபர்கள் கொலை மிரட்டல் விடுத்ததால் மன உளைச்சலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது மனைவி குழந்தைகளுடன் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் உடனடியாகத் தண்ணீரை ஊற்றி முதலுதவி செய்து காப்பாற்றினர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.