தருமபுரி, ஜூன் 20 –
தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் 12வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு காரிமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். அனுராதா தலைமையில், பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) N.சங்கர் முன்னிலையில் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவர்கள் டாக்டர் A.R. சுமதி, டாக்டர் தாரணி ஆகியோர் மாணவிகளுக்கு யோகாசன பயிற்சி, மூச்சுப் பயிற்சி, இயற்கை வாழ்வியல் மருத்துவ முறைகள் குறித்து மாணவிகளிடம் எடுத்து உரைத்தனர்.
மேலும் நிகழ்ச்சியின் முதலில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணி பள்ளியில் துவங்கி ராமசாமி கோயில் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை வந்து அடைந்தது. பள்ளி மாணவிகள் எதிர்கொள்ளும் உடல்நல அசவுரியங்கள், கவனச் சிதறல்கள், ஒழுக்கம், தற்பாதுகாப்பு முதலியவை யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களால் தெளிவாக விளக்கப்பட்டது். இதில் பள்ளியின் மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கலை, தனம் ஆகியோர் கலந்து கொண்டனர்.



