திருப்பூர், செப்டம்பர் 22 –
திருப்பூர் ஊராட்சி ஒன்றியம் காளிபாளையம் ஊராட்சி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூபாய் 12.75 லட்சம் மதிப்பீட்டில் காளிபாளையம் செரங்காடு பகுதியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி துவக்க விழாவினை அதிமுக திருப்பூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளரும் வடக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான திரு கே என் விஜயகுமார் துவக்கி வைத்தார். உடன் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் எஸ் எம் பி பழனிச்சாமி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வேல் குமார் சாமிநாதன், அம்மா பேரவை இணைச் செயலாளர் சந்திரசேகர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் எம். பொன்னுலிங்கம், கே.சி. வடிவேல், முன்னாள் வார்டு உறுப்பினர் கே. வீரப்பன், வி. செல்வம், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் சுரேஷ், ஒன்றிய கலை பிரிவு பொருளாளர் சுரேஷ்குமார். மற்றும் நிர்வாகிகள் ஜெயபால் கோவிந்தசாமி, தனபால், வி. செல்வம், முனுசாமி, செல்வராஜ் தனபால் மற்றும் அதிமுக கழக நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் பெருந்திரளாக பங்கேற்றனர். கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. மேலும் கேவிஆர் பில்டர்ஸ் ரியல் எஸ்டேட் அலுவலகம் துவக்க விழாவும் நடைபெற்றது.



