ஊத்துக்குளி, ஆக. 19 –
விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் திருப்பூர் விவசாயிகள் நல முன்னேற்ற சங்கம் வேதனை. வெள்ளியம்பாளையத்தில் இன்று குப்பை கொட்டுவதை நிறுத்திட வேண்டி போராடியதால் கைது செய்துள்ள விவசாயிகள், பொது மக்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். ஊத்துக்குளி வட்டத்திலுள்ள சர்க்கார் பெரிய பாளையம், அக்ரஹார பாளையம், வெள்ளியம்பாளையம் பகுதிகளில் குப்பை கொட்டுவதை நிறுத்திட வேண்டும்.
திருப்பூர் மாநகராட்சியில் குப்பையை அப்படியே பாறைக்குழியில் கொட்டிவிட்டு சென்றால் நிலத்தடி நீர் உட்பட அனைத்தும் மாசுபடும். அரசின் வழிகாட்டுதல்படி திடக்கழிவு மேலாண்மையை திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் செயல்படுத்த வேண்டுமென வருவாய் கோட்டாட்சியாளரிடம் திருப்பூர் விவசாயிகள் நல முன்னேற்ற சங்க தலைவர் சமூக ஆர்வலராகிய ஈ.பி.அ. சரவணன் கோரிக்கை.



