By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காங்கயம் சட்டமன்ற தொகுதி பொதுமக்கள் பிரச்சினைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் எம்எல்ஏ நடராஜ் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > காங்கயம் சட்டமன்ற தொகுதி பொதுமக்கள் பிரச்சினைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் எம்எல்ஏ நடராஜ் மனு
ஈரோடுதமிழ்நாடு

காங்கயம் சட்டமன்ற தொகுதி பொதுமக்கள் பிரச்சினைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் எம்எல்ஏ நடராஜ் மனு

Last updated: July 31, 2026 6:28 pm
July 31, 2026
3 Views
Share
SHARE

ஈரோடு, ஜூலை 31 –

காங்கயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஈரோடு மாவட்டப் பகுதிகளில் நிலவி வரும் முக்கிய பொதுமக்கள் பிரச்சினைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி, காங்கயம் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.என். நடராஜ், ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில், ஈரோடு – பெருந்துறை – காங்கயம் (SH-96) மாநில நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்த நிலையில், தற்போது பல இடங்களில் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, பிற சாலைகள் மாநில நெடுஞ்சாலையுடன் இணையக் கூடிய சந்திப்புகளில் குறுக்கு பாலப் பணிகள் நிறைவடையாமல் இருப்பதால் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் மிகுந்த சிரமம் ஏற்படுவதுடன், சாலை விபத்துகளில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

மேலும், கீழ்பவானி அணையிலிருந்து ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி பாசனத்திற்காகத் தண்ணீர் திறக்கப்படும் நிலையில், கீழ்பவானி பிரதான கால்வாயில் பசுவட்டி கிராமம் – தோப்புக்காடு அருகே மாநில நெடுஞ்சாலை கால்வாயைக் கடக்கும் இடத்தில் நடைபெற்று வரும் பாலப் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால் ஆகஸ்ட் 15-இல் தண்ணீர் திறக்கப்படும் போது பாசன நீர் விநியோகத்திற்கு இடையூறு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான விவசாயிகளின் சாகுபடி பணிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், இந்த சாலை மற்றும் பாலப் பணிகளை விரைந்து முடித்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சென்னிமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் முறையாக நடைபெறாததால் பொதுமக்கள், குறிப்பாகப் பெண்கள் மற்றும் முதியோர்கள் அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட குடிநீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே, சென்னிமலை பகுதியில் குடிநீர் விநியோகத்தை உடனடியாகச் சீரமைத்து, தேவையான இடங்களில் கூடுதல் மற்றும் மாற்றுக் குடிநீர் விநியோக ஏற்பாடுகளைச் செய்து நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும், இவ்விரு கோரிக்கைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கி விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் மனுவில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

ராகுல் காந்தியை கைது செய்த மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம்
நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
விளாத்திகுளம் அருகே பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய எம்எல்ஏ மார்க்கண்டேயன்
நாகர்கோவில் 3 வயது பெண் குழந்தையை கடத்திய ஆட்டோ டிரைவர் கைது; 3 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
நவீன மனிதர்கள் இயக்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

பரமக்குடி அருகே சேமனூரில் புரவி எடுக்கும் விழா

July 5, 2025
55 Views
புதுக்கடை அருகே வெறிநாய் அட்டூழியம்; பொதுமக்களை துரத்தி துரத்தி கடிக்கும் சிசிடிவி காட்சிகள்
பலசரக்கு கடையில் இருந்த உள்ளி மூட்டையை திருடியவர் கைது
திருப்பூர் fujipure நிறுவனம் மோசடி புகார்; உரிமையாளர் வாசுதேவன் பேட்டி
அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account