By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பக்தர்களிடம் வசூல் நடத்திய ஊழியர் பணியிடை நீக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பக்தர்களிடம் வசூல் நடத்திய ஊழியர் பணியிடை நீக்கம்
கனஂனியாகுமரி

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பக்தர்களிடம் வசூல் நடத்திய ஊழியர் பணியிடை நீக்கம்

Last updated: September 9, 2025 6:38 pm
September 9, 2025
92 Views
Share
SHARE

கன்னியாகுமரி, செப். 9 –

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் வரிசையில் நிற்காமல் நேரடி தரிசனம் செய்வதற்காக பக்தர்களிடம் ஊழியர்கள் யுபிஐ பண பரிவர்த்தனை மூலமும், நேரடியாகவும் பணம் பெற்றும் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக தொடர் புகார்கள் வந்தன. இந்நிலையில் கோயில் ஊழியர் ஒருவர் பக்தர்களிடம் அதிகாலையிலேயே பணம் வசூல் செய்யும் இரு வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. செய்திகளும் வெளியானது.

இதன் எதிரொலியாக நடைபெற்ற விசாரணையில் கோயிலுக்குள் பண வசூலில் ஈடுபட்டவர் இந்து அறநிலையத்துறையின் கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்களின் சிறப்பு காவலர் நிலையில் பணியாற்றி வரும் ஊழியர் செந்தில்குமார் என்பதும், இவர் தற்போது துறையின் வாகன ஓட்டுனராகவும் இருந்து வருவது தெரியவந்தது. இந்நிலையில் செந்தில்குமாரை பணியிடை நீக்கம் செய்து இந்து அறநிலையத்துறையின் குமரி மாவட்ட இணை ஆணையர் (கூடுதல் பொறுப்பு) ஜான்சி ராணி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் இணை ஆணையர் அலுவலகத்தில் சிறப்பு காவலர் செந்தில்குமார், தற்போது மாற்றுப்பணியில் ஊர்தி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர் தனது பணிக்கு எவ்வித தொடர்பும் இல்லாத கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் அதிகாலை வேளைகளில் வந்து பக்தர்களிடம் சிறப்பு தரிசனத்திற்கு அழைத்து செல்வதாக கூறி முறைகேடாக பணவசூலில் ஈடுபட்டு வருவது சமூக ஊடகங்கள், மற்றும் வீடியோ பதிவுகள் மூலம் தெளிவாக தெரிய வருகிறது. இவர் அரசுக்கும், அறநிலையத்துறைக்கும், திருக்கோயில் நிர்வாகத்திற்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு வந்துள்ளார். எனவே நிர்வாக நலனை கருத்தில் கொண்டு செந்தில்குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பல காலமாக கன்னியாகுமரி கோயிலுக்குள் பக்தர்களிடம் தொடர்ந்து நடந்து வந்த வசூல் வேட்டை நிர்வாக அதிகாரிகளின் ஆதரவுடனே நடந்து வந்ததாகவும், இவ்விஷயத்தில் சம்பந்தப்பட்ட ஊழியர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்காமல், மேல் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

மகள் கொலை, மருமகன் மர்மசாவுக்கு
செங்கல் சிவபார்வதி கோயில் அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட் புக்குகள் வழங்கப்பட்டது.
அகஸ்தீஸ்வரம் விவேகானந்த கல்லூரி முதல்வராக பேராசிரியர் டி.சி. மகேஷ் பொறுப்பேற்பு
கன்னியாகுமரி முருகன் குன்றம் வேல்முருகன் கோயில் தைப்பூசத் திருவிழா
ரூ 4.23 கோடி ஊழல் முறைகேடு; தர்மபுரம் முன்னாள் ஊராட்சி தலைவி மீது நடவடிக்கை எடுத்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல் போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

விசாரணைக்கு பயந்து விஷம் குடித்து சிகிச்சை

October 29, 2024
71 Views
தருமபுரி நகர திமுக சார்பில் உறுப்பினர்கள் கூட்டம்
கோயமுத்தூர் மாவட்டம் வ.உ.சி மைதானத்தில் அரசு பொருட்காட்சி
ரூ.36 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட இருக்கும் ரயில்வே மேம்பாலம்
இரணியல் அருகே விவசாயின் உழவு இயந்திரம் எரித்து தாக்குதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account