நாகர்கோவில், மே 30 –
கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி. செல்வகுமார் வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்து தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., நன்றி தெரிவித்தார்.
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தளவாய் சுந்தரம், இன்று கொட்டாரத்தில் உள்ள கலப்பை மக்கள் இயக்கத் தலைவர் பிடி செல்வகுமாரின் இல்லத்திற்குச் சென்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில், அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட தளவாய் சுந்தரத்தை ஆதரித்து பிடி செல்வகுமார் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, தேர்தலில் வெற்றி பெற்ற தளவாய் சுந்தரம் இன்று பிடி செல்வகுமாரை அவரது இல்லத்தில் சந்தித்து, தனது வெற்றிக்காக பாடுபட்டமைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவருக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். அப்போது இருவரும் தொகுதி வளர்ச்சி மற்றும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்துரையாடினர்.



