கடையநல்லூர், நவ. 8 –
கடையநல்லூரில் சிறுவன் உள்பட நாலு பேரை கடித்த தெரு நாய்களை கடிவாளம் போட்டு பிடித்து நகர சபை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.
கடையநல்லூர் நகர சபை சரகத்திற்கு உட்பட்ட குமந்தாபுரம், கிருஷ்ணாபுரம், முத்துகிருஷ்ணாபுரம், மாவடிக்கால், மதினா நகர், பேட்டை, இக்பால் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஓரிரு வருடங்களாக வெறி நாய்களின் கொடூர தாக்குதல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே வருகிறது.
இந்த நிலையில் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள அசைவ இறைச்சிகளை வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களில் பலரும் தெருவீதிகளில் கொட்டி வாடிக்கையாக கொண்டுள்ளனர். இப்படி ஒட்டப்படும் அசைவ கழிவுகளை நகராட்சி நிர்வாகம் தினமும் அதிகாலையிலே அப்புறப்படுத்துவது வழக்கம். இதற்கிடையில் அப்படி அந்த அசைவ கழிவுகளை அழுவதில் நகர சபை நிர்வாகம் கொஞ்சம் காலதாமதம் ஏற்படுத்தினாலும் கூட அந்த அசைவு கழிவுகளை இந்த தெரு நாய்களும் வெறி நாய்களும் உண்ணுவதற்காக வீதிகளின் அதிகாலைகளிலேயே உலா வருவது வழக்கம்.
நகரசபை நிர்வாகம் இது போன்ற அசைவு கழிவுகளை துப்புரவு செய்ய வரும் முன்னரே இந்த தெரு நாய்கள் அந்த அசைவ கழிவுகளை உண்ணுவதற்காக தெரு வீதிகளில் கூட்டம் கூட்டமாக உலா வந்து கொண்டிருப்பது வாடிக்கையான ஒன்றாக இருந்து வந்தது. ஒருவேளை சரியான சமயத்தில் இது போன்ற அசைவ கழிவுகளை நகராட்சி நிர்வாகம் அள்ளிச் சென்று விட்டால் அசைவ கழிவுகளை தினமும் ருசித்துப் பார்த்த இந்த வெறி நாய்கள் ஒரு சில துண்டுகள் கிடப்பதை உண்ணுவதற்காக போட்டி போட்டுக் கொண்டு ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொண்டும் கிடைக்காத அந்த நாய்கள் வெறி பிடித்து வீதிகளில் நடமாடும் மனிதர்களை ருசித்துப் பார்க்க துவங்கி விட்டன. இதனால் இது போன்ற விரும்பத்தகாத கொலை தாண்டவங்கள் இது போன்ற வெறி நாய்களால் அனுதினமும் நடந்தேறி வருகிறது.
இந்த நிலை ஒரு பக்கம் இருக்க பலர் வீட்டின் செல்லப் பிராணிகளாக சில நேரங்களில் தங்களால் வளர்க்கப்படும் நாய்களுக்கு இறைச்சி கழிவுகளை வழங்கி நாய் வளர்ப்பை ஊக்கப்படுத்தி வந்த நிலையில் அந்த நாய்களும் ஒரு சில நேரங்களில் பிராணி வளர்ப்பவர்களின் கட்டுப்பாட்டுகளையும் மீறி சிறு குழந்தைகள் முதல் தள்ளாடும் முதியவர்கள் வரை பதம் பார்த்து வேட்டையாடி வருகிறது. நாய் வளர்ப்பிற்கு அரசு நிர்வாகங்கள் எத்தனையோ? விதிகளை வழிகாட்டுதல் செய்திருந்தாலும் ஏனோ? கடையநல்லூர் பகுதிகளில் வெறி நாய்களின் நடமாட்டபிடியில் இருந்து வீதிகளில் பொதுமக்கள் நடமாடவே மிகுந்த பாதுகாப்பற்ற நிலையே தொடர்ந்த வண்ணமாய் உள்ளது.
ஒரு பக்கம் ப்ளூ கிராஸ் எனும் அமைப்பு செல்லப் பிராணிகளை வனவிலங்குகளை வேட்டையாடுவதை தவிர்க்க பல்வேறு வகையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதே நேரம் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் வெறி நாய்களை வேட்டையாட அரசு நிர்வாகமும் ஒரு தடுமாற்றத்தை பின்பற்றி வருகிறது. இந்த நிலையில் பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்புவதற்கு கூட வீதிகளுக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் மாவடிக்கால், முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் நேற்று ஒரே நாளில் மட்டும் நான்கு பேரை தெரு நாய்கள் கடித்து குதறி அவர்கள் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த செய்தி பொதுமக்களிடையே பரபரப்பையும் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. மேலும் இந்த விஷயம் காட்டுத் தீயாய் பரவ நகர சபை அதிகாரிகளை பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முற்றுகையிட்டு நாய்களை கட்டுப்படுத்த கோஷங்களை எழுப்பி கோரிக்கைகள் விடுத்தனர்.
இந்நிலையில் கடையநல்லூர் நகர சபை நிர்வாகத்திற்கு புதியதாக பதவிப் பொறுப்பு ஏற்றுக் கொண்ட ஆனணயர் வெறி நாய்களின் கொட்டத்தை அடக்க நேற்று சுகாதார அதிகாரிகளுக்கு கடும் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து இன்று காலை 6 மணிக்கே கடையநல்லூர் நகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகளும் துப்புற பணியாளர்களும் வெறி நாய்களை கடிவாளம் போட்டு வேட்டையாடி நடவடிக்கை மேற்கொண்டது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இது போன்ற அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட கடையநல்லூர் நகராட்சி நிர்வாக ஆணையாளருக்கும் சுகாதார அதிகாரிகளுக்கும் ஒட்டுமொத்த பொதுநல அமைப்புகளும் பொதுமக்களும் தங்களது பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர்.



