கிருஷ்ணகிரி, ஆக. 29 –
ஐந்தாவது இந்தியா – நார்வே சர்வதேச கல்வி உச்சி மாநாடு மற்றும் விருதுகள் விழா 2025 ஆகஸ்ட் 28-ம் தேதி நார்வே நாடாளுமன்றம் (Stortinget) இல் நடைபெற்றது. இந்த விழாவில் நார்வே நாடாளுமன்றத்தின் துணைத் தலைவர் மோர்டன் வோல்ட் சிறப்பு விருந்தினராகவும், நார்வே நாடாளுமன்ற உறுப்பினர் ஹிமான்ஷு குலாத்தி தலைமை விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளிக்கு மாற்றத்தைக் கொண்டு வரும் மதிப்புமிக்க கல்வித் திறமையற்கான சிறந்த விருது (Transformative Value- Based Edu cation Excellence Award) வழங்கப்பட்டது. இந்த விருதை நார்வே நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தலைமை விருந்தினர் ஹிமான்ஷு குலாத்தி வழங்கினார். இவ்விருதை அதியமான் பப்ளிக் பள்ளியின் நிறுவனர் முனைவர் சீனி திருமால் முருகன் பெற்றுக் கொண்டார்.



