அருமனை, ஜூன் 3 –
ஆறுகாணி காவல் நிலையத்தில் உளவுத்துறை காவலராக ஜெயச்சந்திரன் பணியாற்றுகிறார். இவர் பொது மக்களை அவதூறாக பேசுவதுடன் உயர் அதிகாரிகளுக்கு தவறான தகவல்களை கொடுத்து பல வழக்குகளில் சம்பந்தப்படுத்துகிறார். இரவு நேரங்களில் தனியாக இருக்கும் பெண்களிடம் அவர்களின் அருகில் போய் நின்று கொள்ளுகிறார். காட்டு மிருகங்கள் நடமாடும் இந்த ஊரில் மக்கள் என்னவென்று அறியாமல் திகைத்து நிற்கின்றனர்.
உயர் அதிகாரிகளுக்கு மனுக்கள் கொடுத்தும் எந்த பயனும் இல்லை. பதவி வெறிப்பிடித்து தலைக்கு ஏறிய அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று 200க்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியினுடைய பிரமுகர்கள் ஆறுகானி சந்திப்பில் போராட்டம் நடத்தினர். இவரைக் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு புகார் மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையோ இடமாற்றமோ செய்யவில்லை.



