தருமபுரி, ஆகஸ்ட் 18 –
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் இலளிகம் சுதந்திர போராட்ட வீரர் தியாகி ஆர்.பச்சாகவுண்டர் நினைவு படிப்பகம் முன் 79-வது இந்திய சுதந்திர தின விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு இலளிகம் முன்னாள் ஊராட்சி வார்டு உறுப்பினர் எல்.சி. கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இலளிகம் அலமேலு எத்துராஜ், நார்த்தம்பட்டி என்.பி. ராஜி ஆகியோர் முன்னிலையில் இலளிகம் கிராம ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும்
படிப்பக நிர்வாகியுமான ஜெ. பிரதாபன் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து
சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.
நிகழ்சியில் ஏராளமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தின் கீழ் வேலை அட்டை பெற்ற கிராமபுற தொழிலாளர்கள் கலந்துக் கொண்டனர். இறுதியாக
எல்.பி. பழனி நன்றி கூறினார்.



